top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Thanga Pandian G. - India

Entry No: 

531

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

உன் விழி பார்த்து
வழி மறந்து நின்ற என்னை
உன் விழி அசைவில் கட்டுப்படுத்தியவள் நீ
உன் பூ வாசமும் என் சுவாசமும் ஒன்றாய் கலந்த நம் காதல்தேசம்
இன்று சாபத்தின் மோசம்
ஏதோ இடையூறு அதை வைத்து என்னை மறக்கிறாய்; அல்ல மறுக்கிறாய்; அல்ல மறுக்க முயல்கிறாய்;

ஒரு முறையா இரு முறையா
பல முறை மானங்கெட்டு நின்றேன்
என்னை காதலிக்க மறந்து விட்டாயா? அல்லது மறுத்து விட்டாயா??

என் காதலி எங்கே?
இல்லை என்றாய்
என் காதல் எங்கே?
இல்லை என்றாய்
என்னை காதலித்தாயா?
இல்லை என்றாய்
காரணம் கேட்டேன்
இல்லை என்றாய்
எந்த வினாவுக்கும்
விடையும் இல்லை

அன்புக்காக ஏங்கி நின்று அனாதை ஆனதை சொல்லும் என காதல் கதை
நீ இல்லாத எனக்கு இனி எங்கே பாதை?

bottom of page