top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sabari Nath - India

Entry No: 

138

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

என் இரவுக்கும் என்னவளுக்கும் எத்தனை ஒற்றுமை!
நிலவொளியில் குளிர்காயும் இருளைப் போல;
உன் நினைவலைகளில் நான் காய்கிறேன்.
வெண்ணிற வெண்ணிலா அவளும்;
அதன் பரப்பில் கரைகளாக நானும்!
மதிமுகம் முகமதி என்ற உருவகம்,
உனது ஒளிமிகு முகம் கண்டு அறிந்தேன்.
மேலிருக்கும் நிலவைச் சுற்றி ஒளிவட்டம்,
கீழிருக்கும் நிலவைச் சுற்றி பருத்தியின் விட்டம்.
உன்னைத் தீண்டும் வண்டுகளாக செயற்கைக்கோள்,
என்னவளைத் தீண்டுவது எனது எழுதுகோல்.
ஒற்றுமையில் சில வேற்றுமைகள்;
அந்தரத்தில் கருப்புகாடு, வெள்ளைப்பந்து;
என்னணங்கில் வெள்ளைப்பந்து, கருப்பு மேடு!
மேகம் போர்த்திய கறையுடைய உடல்,
தேகம் போர்த்திய கறையில்லா காந்தம்.
உன் அழகை மொத்தமும் வர்ணிக்க இரவால் மட்டுமே முடியும்!

bottom of page