top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Muthu Selvan P - India
Entry No:
233
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தாயின் அன்பு
வானின் கருமையை
கண்ணுக்குத் தீட்டியவள்
வாலியின் கவிதைக்கு
உருவம் கொடுத்தவள்
பூக்களும் ஏக்கத்துடன்
பார்க்கும் முகங்கொண்டவள்
நான் பிறக்க அவள்
மறுபிறப்பை அடைகிறாள்
காற்று எனைத்தீண்ட
தென்றலாய் அணைப்பவள்
என் கால்களும் புதைந்தது
அவள் கரங்களுங்குள்ளே
என் உலகம் மகிழ்ந்தது
அவள் புன்னகைத்தபோது
நொடிகளும் கடக்கிறதே
அவள் இமை அசைவிலே
அவள் சேலையிலே
என் நித்திரையும் சுகமானதே
கடல்அலை அவள் அன்பு
கரையென்னில் சேர்க்கிறதே
அந்த அன்பின் உருவமே
என் தாயானவள்..........!
bottom of page