REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Manoj M - India
Entry No:
392
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
குற்றால அருவி கொண்டு துவைத்தாலும் அவளின் கூந்தல் மணம் மாறுமோ?
அவளின் இருபாதங்கள் தரையில் பட்டால் அட ஆயுள்கொள்ளும் ஆற்றுமணல் கூட!
தன்நிழலை அழகிபோட்டிக்கு அனுப்பிவைத்தாலும் அனைத்து பரிசையும் வென்றுவிடும் அவளின் அழகினை கொண்டு…
தீண்டும் வண்டுக்கே தெரியாத ஒன்று! சொட்டும் தேன்துளியும் கெட்டுவிடும் அவளின்
உதட்டில் உரசி என்று….!
பிறந்துவிட்டால் கண்ணகிக்கு மேல்கோவம் கொண்டு மதுரையை எரிக்க! எரித்தாலும் கடலேவற்றும் அளவிற்கு கண்ணீர்வடித்து காயம்ஆற்றும் குணமுடையவள்…!
இரவிற்கே ஒளிதரும் அவளின் புன்னகை, பகலிடமும் பகைக்கு நிற்கிறது? நான்தான் பெரியவள் என்று!
காஷ்மீரயும் பாலைவனமாக மாற்ற இவளின் மூச்சுகாற்று ஒன்றே போதுமே!
மழையையும் மறந்துவிட்டு அவளை
தென்றலென நினைத்து மயிலும் தோகைவிரித்தாடுமோ?
வெண்ணிலவே வேடிக்கை பார்க்கவேண்டியுள்ளது,இவள் இருக்கையில் எனக்கென்ன வேலை!!!! சற்று ஒய்வெடுக்கிறேன் என்று.
-மு.மனோஜ்