REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
KARUNARAN VAIRAVEL - India
Entry No:
295
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காணமல் போகும் நம் கலைகள்..!
----------------------------------------
தெருக்கூத்துகள் எல்லாம் தெருவோடு போக/
மேடை நாடகங்கள் அது மெழுகாகி போக/
நாட்டிற்கு சொந்தமான நம் கலைகளெல்லாம் நாதியற்றே போக/
கிராமத்து கலைஞர்களும் வாழ வழியில்லாமல் சாக/
காரணமானவர்கள் யாரென்றே காண முடியவில்லை..!/
நாட்டை நிலைநாட்ட வேண்டிய நாட்டுப்புறக் கலைகள்/
இன்று நலிவடைந்து நிற்க/
வல்லரசு என்ற வார்த்தையெல்லாம் வழியிழந்தே போக/
நாட்டுப்புறக் கலைஞர்களும் கலையிழந்தே வாழ/
காரணமானவர்களுக்கு எல்லாம் எத்தனை காரணிகள் வேண்டும் வீழ..!/
நாட்டுப்புறக் கலைகள் காணமல் போனதற்கு காரணம் என்ன ?/
கண்ணைக் கட்டிக் கொண்டு
கணினியின் பின்னே சென்றதனாலா ?/
இல்லை கைதிகளாக கைப்பேசிக்குள் அடைப்பட்டதனாலா ?/
இவற்றையெல்லாம் கடந்த மனிதனின்
வரைமுறையற்ற வளர்ச்சியினாலா ?/
இல்லை கலைகளின் கருத்தினை அறியாத கயவர்களினாலா..?/
கலைகளை மதிக்க மறுத்தாலும்/
அவற்றை வளர்க்க வகை செய்தாலே/
நாம் பிறந்ததன் பயனையாவது பறைசாற்றிச் செல்லலாம்..!/
வளரும் கவிஞன்...
வை. கருணாகரன்,
சேலம்.