top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Devaraj Sasidaran - India

Entry No: 

208

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

=== மெய்யன்பு ===

என்னவளின் அன்பை என் மெய் மெய்யுணர்ந்தது அவள் விழி நோக்கியதால்.
அண்டம் முழுதும் வியாபித்திருக்கும் அன்பை என்னை மட்டும் அவளது அண்டமென எண்ணி
அவள் அன்பை எனக்காய் பரிசளித்தாள்.
வேறுயிர் மட்டுமல்லாது எஃதுயிர்
எமை தீண்டும் முன் அவளது அன்புக்கரங்களால் அனைத்துக்கொள்வாள்.
பிறர் கண் படாது அன்பால் என்னை பொத்திவைப்பாள்.
நான் எஃதுயர் சென்றேனும் அவளுக்கு நான்
அவள் முந்தானை பிடித்தோடிவரும் சிறுவனே.
இத்தேகம் அழியும் வரை மெய்யாய்
என் மனம் கொண்டாடும் எனக்கானவள்.
என்னவள்.
என் அம்மா…


- தேவராஜ்

bottom of page