top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Anbarasi Rajalingam - India

Entry No: 

44

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்
______________
உன்
முகம் காணவே
துடிக்குதடி
என்
இதயம்.......❤️

முதல் நாள்
பார்த்த அன்றே
பலநாள் பழகிய
ஞாபகம்.......❤️

என் காதலை
இன்னதென்று
என்னால்
விளக்க முடியாதடி....❤️

நகங்களை
வெட்டி எறிவதைப் போல்
என்
காதலை
நீ
வெட்டி எறியலாம்.......
அத்தனையும் நினைவுகளாய்
என்
நெஞ்சில்..........❤️

ஏன்
உன் மீது மட்டும்
இத்தனை காதல்
எனக்கு......❤️

நீ
என்னுடன்
இருந்த போது
உணராத வலியை
உன்னைப் பிரிந்து
கணத்தில்
உணர்கிறேன்
ஓ......
இது தான்
காதல் வலியோ......❤️

ஏன்
இத்தனை வலிகள்
என்
நெஞ்சமெல்லாம்
உன்
நினைவுகளை
ஊசியினால் வைத்துவிட்டு
சென்றதால்
வந்த வலியோ.......❤️

நதியில்
அடித்துச் செல்லும்
கூழாங்கல்லாய்
என்னைப்
புரட்டி எடுக்கும்
உன்
நினைவுகள்.........❤️

என்
நினைவுகளுக்கு
உருவம்
கிடைத்திருந்தால்
அதுவே
என் காதலை
உன்னிடம்
சேர்த்திருக்கும்.......❤️

உன்மீது
எனக்குண்டான
காதல்
உனக்குத் தெரியாது
ஆனால்....
ஒருபோதும் உன்னிடம்
கூறியதில்லை.....

சொல்லாத
காதலில் தான்
எத்தனை
சுகமான வலி.......❤️

உன்னிடம்
ஏதோ உள்ளதடி....
நீ
எத்தனை முறை
உதாசீனப்
படுத்தினாலும்
மீண்டும்
உன்னையே
தேட வைக்கிறது
உன்
நினைவுகள்.........❤️

உந்தன்
நினைவுகளால்
எந்தன் மனம்
கனக்கிறது........❤️

இதை
அடுத்தவர்களால்
உணரவும் முடியாது.....
அடுத்தவர்களுக்கு
உணர்த்தவும்
முடியாது......❤️

நான்
மட்டுமே உணரும்
அந்த வலியை
உன்னால் கூட
உணர முடியாது.......❤️

காதலித்து
பார்த்தவர்களுக்கு மட்டுமே
தெரிந்த வலி அது.......❤️

உன்னுடன்
பேசும் போதோ....
என்னுடனான
உன்
நினைவுகளை
நினைக்கும் போதோ......
என் கால்கள்
தரையில்
நிற்பதில்லை......
கைகளுக்கு மட்டுமல்ல
கால்களுக்கும் அல்லவா
இறக்கை முளைத்து
பறந்து செல்கிறேன்
ஒரு
பறவையைப் போல.......❤️

என்னை மட்டும்
இறைவன்
இறக்கையோடு
படைத்திருந்தால்
உன்னைப் பிரிந்து
தொலைவில் நின்று
ஏங்கியிருக்க
மாட்டேன்........❤️

இறக்கை
இருக்கும் பறவையிடம்
வானம்
வசப்படுவதைப்போல
நீயும்
என் வசமாகியிருப்பாயடி.....❤️

மலருக்கும்
வண்ணத்துப்பூச்சிக்கும்
இடையே
மட்டும்தான்
காதலா.......
ஏன் வேர்களுக்கு
இல்லையா........
உனக்காகவே வாழும்
வேர் நான்........❤️

செடியினைச்
சுமக்கும் வேராய்
உன்
நினைவுகளைச் சுமக்கும்
நான்.........❤️

என் காதல்
செடிகளுக்கே
தெரியாமல் பூத்த
கைக்கிளைப் பூக்களாகவே
இருந்து விட்டுப்
போகட்டும்........❤️

என்
அதிகபட்ச ஆசையே
உன்
முகத்தில் தெரியும்
குழந்தைத் தனமான
சிரிப்பைக் காண்பது
மட்டும் தான்.......❤️

என்னிடம்
இருக்கும்
மொத்தக் காதலையும்
உன்னிடம்
கொட்டித் தீர்ப்பேன்.......❤️

பதிலுக்கு
நான்
உன்னிடம்
எதிர்பார்ப்பது
ஒன்று மட்டுமே......❤️

உன்
முகத்தில் தெரியும்
கள்ளமில்லாச் சிரிப்பை
என்
வாழ்நாளின் இறுதிவரை
இரசிக்க வேண்டும்
என்பது
மட்டுமே.......❤️

உன்
கையெழுத்தைத்
தொட்டுப்பார்த்து
முத்தமிட்டேன்
நான்
இன்று........❤️

அந்த
கையெழுத்தின் சொந்தக்காரியை
காணும் நாள்
எந்நாளோ?.......❤️

ஒவ்வொரு
நொடிப்பொழுதும்
உன்னை
நேசிப்பதால்
இக்காற்றையும்
நேசிக்கிறேன்
நான்.......❤️

நீ
என்னை விட்டு
எவ்வளவு
தொலைவில் சென்றாலும்
நீ
சுவாசித்து
விட்டுச்சென்ற
மூச்சுக்காற்றை மட்டும்
என்னிடம்
சேர்த்து விடுகிறது......❤️

என்
எண்ணங்களுக்கு மட்டும்
எப்போதும்
இறக்கை உண்டு......❤️

ஒரு
வண்ணத்துப்பூச்சியாய்
உன்னை மட்டுமே
சுற்றிச் சுற்றி
வட்டமடிக்கும்
என்
எண்ணங்கள்.......❤️

உன்னை மட்டுமே
காணத் துடிக்கும்
என்
கண்களுக்கு.....
நான்
உனக்காக ஏங்குவது
அவஸ்தையாக
இருந்தாலும்......


என்
நெஞ்சுக்கு
என்னவோ
ஆனந்தமடி........❤️

ஆனந்த
அவஸ்தையடி......❤️


நன்றி.










bottom of page