top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

A. NITHYA KALYANI - India

Entry No: 

340

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
ஆர்வமாய் அன்பு செய்யுங்கள்
இடைவிடாது பொழியுங்கள்‌ அன்பு மழையை
ஈந்து விடுங்கள் அன்பை அனைவருக்கும்
உயிர்கள் அனைத்தையும் அன்பால் அரவணையுங்கள்
ஊக்கத்தை விதைக்கட்டும் உங்கள் அன்பு
என்றும், அன்பு செய்யும் இதயம் காயப்படுத்தப்படலாம்,
ஏமாற்றப்படலாம் .ஆனால் ,ஏற்றம் உறுதி
ஐயமின்றி அன்பு செலுத்துவோம்.
ஒன்றும் நிலையில்லா இவ்வுலகில்
ஓயாது அன்பு செய்து நிலைத்திருப்போம் அன்னை தெரசா போலே
ஒளவியம் களைந்து அலங்கரிப்போம் வாழ்வை அன்பால்!!!


கவிச்செம்மல்.ஆ.நித்ய கல்யாணி
கல்லூரி மாணவி
தமிழ்த்துறை
டோக் பெருமாட்டி கல்லூரி மதுரை

bottom of page