top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

ராம் பெரியசாமி - India

Entry No: 

347

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

கண்ணாடித்தாெட்டிக்குள் நான்
மீன்களாய் உன் விழிகள்
கூழாங்கற்களாய் கனவுகள்
நதியில் மிதக்கிறேன் நான்

சிவந்திருக்கிறது
உன் இதழ்
வண்ணத்துப்பூச்சி நிறம்
உதிர்ந்த சருகுகளில் ஈரம்
மழையாய் பெய்கிறது உன் நினைவுகள்

கடிகாரத்தில் இருமுட்கள்
குத்திக்கிழிக்கிறது தனிமை
கிழக்கும் மேற்குமாய் திசைகள்
மத்தியில் துடிக்கிறது இதயம்

கடவுள் புன்னகைத்திருக்கிறார்
மௌனமாயிருப்பது என் காதல்
கடற்கரையில் அலைகள்
கரித்துக்கொண்டிருப்பது
என் கண்நீர்

பிரபஞ்சமென்பது நீ
நானென்பது நிலம்

ராம் பெரியசாமி
Pc : Tamil Typography

bottom of page