top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

கிரிஜா க. - India

Entry No: 

425

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பால்
அன்பால் வெல்வோம்

நிந்தனையின்றி சிந்தனைசெய்வோம்!
நித்தமும் நினைவில் அன்பினை நடுவோம்!
நீர்நிலம்காற்றண்ட ஆகாயமெங்கும்
நிம்மதி தெளித்து நிசமாக வாழ்வோம்!

பழிப்பதும் அழிப்பதும் கழிப்பதுமன்றி
பந்தமாய்பலருடன் பண்பாற்றி நிற்போம்!
பகர்வதும் நுகர்வதும் பற்றினையூட்ட
பலகாலம் நின்று படரட்டும் கொடியாய்!

செயலாற்றும்முன்னும் சொல்லாடும்முன்னும்
செய்தேனாவென்ற மாவினா எழாமல்
செய்ததை சொல்லி உச்சிமுகர்ந்தோங்கும்
சேயெனப் புகழ ச்செதுக்கிடு நன்றே!

சிந்தனையூற்றில் நன்மைகள் ஊறும்
சிந்திக்கத் துவங்கினால் சஞ்சலம் தேயும்
சிலந்தியாய் ஒருமித்து சாதனைப்புரிய
சிக்கலையுடைக்க வழிகளும் பிறக்கும்

சிந்தனை சோர்வினைப் போக்கிடும் மருந்து
சிலநேரம் அதுவே சத்தான விருந்து
சிறைப்பட்ட மனதையுடைக்குஞ்சிற்றுளியாய்
சிகரத்தின் படைப்பு தோன்றிடும்வெளியே!

அமைதிக்கு அடிக்கல் நாட்டியே நீண்ட
அகவைக்கு படிக்கல் கூட்டிடும் என்றும்
துயருக்கு துணையாக நிற்காமல் காக்கும்
துன்பத்தை நம்பக்கம் விடாமல் பார்க்கும்

நாவினையடைக்கி நல்லதைக்கூறி
நற்றமிழுண்டு நாளும்நடைப்போ
சிந்தனைத்துளியால் சிதறட்டும் தாழ்வு
சிரிப்பலையெழவே மாறட்டும் வாழ்வு.
க.கிரிஜா

bottom of page