top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Senthil Kumar - India

Entry No: 

125

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பல்லவி:

காதல் கவிதை சொல்லும் நேரம் - நெஞ்சினிலே!!!
காமன் விதைகள் தூவும் ஓரம் - கண்களிலே!!!
தேகம் தீயாய் உருகும்!!!
மோகம் பூவாய் மலரும்!!!

சரணம் 1:

காந்தப் பார்வை வீசும் - உன் விழியினில்!!!
குயிலும் கவிதை பேசும். - என் கனவினில்!!!
நேசத்தில் சுவாசத்தில் அது கலந்து கலந்து சுத்தும்!!!

உன் ஈர உதட்டின் முத்தம் - சுவைத்திட!!!
என் உணர்வு நரம்பை மொத்தம் - தழுவிட!!!
ஆதியும் அந்தமும் அதை வேண்டும் வேண்டும் நித்தம்!!!

காலையும் மாலையும்
கனவினில் கட்டி அணைத்து முத்தம் இட்டு கொன்றவளே!!! (காதல் கவிதை சொல்லும்...)

சரணம் 2:

வெட்கம் சிறகை விரிக்கும் - உன் மனதினில்!!
இன்ப ஊற்றும் எடுக்கும் - என் நினைவினில்!!!
காதலும் காமமும் எனை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும்!!!

இரவின் நேர உறக்கம் - உனை வருடிட!!!
காமன் பார்வை தாக்கம் - எனை உரசிட!!!
இன்பமும் துன்பமும் எனை மாறி மாறி அணைக்கும்!!!

நிஜத்திலும் நிழலிலும்
நரம்பினில் ரத்த ஓட்டம் இட்டு உயிரை கொடுத்தவளே!!! (காதல் கவிதை சொல்லும்...)

bottom of page