top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Sarran Mohan - India
Entry No:
110
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
உண்மையறிவாயோ வண்ணமலரே......
மயக்கும் கண்ணால் மதிமயங்கச் செய்தவளே....
மலரும் கூட மென்மையில் உன்னிடம் தோற்றிடுமோ....
மதி ஒளியினில் அவிழ்ந்த மலராக,
மங்கையே இந்நாணம் எதற்கோ?.....
மின்னலாய் வந்து, என் முன்னதாய் நின்று,
என்னவளே, என் கண்களைப் பறித்தாயோ...
விண்ணுலக மங்கையின் முன்னழகை விஞ்சியவளே,
பொன்னழகுதான் உன் அழகுக்கு ஈடாகுமோ?
உன் கண்ணால் என்னைக் கட்டிப் போட்டாய்....
உன் சொல்லால் எனைச் சொக்க வைத்தாய்....
உனக்கே உடையவனாக விழைகிறேன்.....
உண்மையறிவாயோ வண்ணமலரே....🤍
bottom of page