top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Abdul Kader - India

Entry No: 

47

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

இது ஒரு ஊமைக்காதல்....
அவன் கண்கள் இரண்டும் அயராமல் அவள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும்...
நாழிகள் பல கடந்தாலும்
கால்கள் நின்று வலித்தாலும்
அதில் உள்ள சுமையே ஒரு சுகம்தான்...
கண்கள் அவளைக் கண்ட அடுத்த கணமே
துடிக்கும் மன பட்டாம்பூச்சி
சிறகடித்துச்சொல்லும் அவன் காதலை...
தூண்டிலில் சிக்கிய மீன்போல்
காதலில் சிக்கிய அவன் மனம் எதையும் சிந்திக்க இடம் கொடுக்க மறுக்கும்...
அவள் பெயர் கேட்கும்போதெல்லாம்
அவன் மனம் சிலிர்த்தது உண்மைதான்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
அந்தோ கண்களால் மட்டுமே வளர்ந்த காதல் பேச்சின்றி மௌனமாகியதென்னவோ...
இரு காதல் ஜோடிகளின் ஆசையும் ஊமையாகிதென்னவோ

bottom of page