REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Aagash K - India
Entry No:
330
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
உனது காதலால் கட்டமைத்து
அன்பினால் அலங்கரிக்கபட்ட வீட்டில்
பத்து மாத காலம் பத்திரமாக வசித்தேன்..
அக்கருவீட்டுக்கு
எப்படி நன்றி செய்வேன்…!!
பிறந்ததும் சொர்க்கம் சென்று அங்கே
மதியில் மரக்கட்டில் போட்டு
மண்ணுலகத்தை ரசிப்பது போல் இருந்தது
எனது மேனி உனது மடியில் தவழ்ந்த போது…
அந்த மதி போன்ற மடிக்கு
எப்படி நன்றி செய்வேன்…!!
அறுசுவை இல்லாத உணவு கூட
உன் கைகள் பட்டால் அமிர்தமாகுமே..
அறுசுவைக்கும் அரசியான அக்கைகளுக்கு
எப்படி நன்றி செய்வேன்…!!
கொடிய நஞ்சினை கக்கும் பாம்பும்
கொஞ்சி விளையாடும் குழந்தையாய் மாறிடுமே
உன் கைவிரல்கள் கோதினால்…அவ்விரல்களுக்கு
எப்படி நன்றி செய்வேன்…!!
கடவுளிடம் வரமொன்று கேட்பேன்
என் வாழ்க்கை முடியும் நிலையிலும்
வீடு திரும்பினாள் வரவேற்க நீ வேண்டும்
உனது கைவிரல்கள் என் முடியை கோத
உன் கைகள் உணவு ஊட்டி விட
என் சொர்கமான உன் மடியில் தலை வைத்து
இக்கவிதையை நான் வாசிக்க வேண்டும்...!!!