top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Videgi P R - India

Entry No: 

182

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அரசின் பாசம்

தடபுடலாக தஞ்சாவூரில் கல்யாணம்
கார் பயணம்
அவசர தீர்மானம்
ஊர் அடைய சிறிது நேரம்

வந்தது ஓர் அபாயம்......
காருக்கு ஓய்வெடுக்க ஆசை
டயரில் டப் என்று ஓர் ஓசை

நடந்து போகலாமே என்ற வேட்கை....
கிராம பாதை நெடுக வேடிக்கை

ஜோடியாக நின்ற பாறைகளை பார்த்த வியப்பில்....

கிராமத்து பெண்மணி வெற்றிலை வாய்ச்சிரிப்பில்

"சோழ அரசன் காலத்து சுமைதாங்கி கல்லு மா!
காலத்துக்கும் உதவும் வெள்ளை மனசு மா!
கால் நடையா நடந்தாலும் களைப்பு தெரியாம
பச்சை மரங்களும் பாடும் கிளிகளும் பார்த்து இருக்கேன்
மயிலாட பார்த்து இருக்கேன் மஞ்ச குருவி பார்த்து இருக்கேன் !
காலும் வலிக்காம காத தூரம் போயிருவேன்
எங்க மகராஜன் வாழ்ந்த காலமது"
என்று அவள் பாடிய பாடலில்....

நாங்களும் களைப்பு நீங்கி
காரில் ஏறி பயணம் தொடர்ந்தோம்...

bottom of page