top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

VARUN MAGIZHAN - India

Entry No: 

346

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

சொட்ட சொட்ட காதல்



பிளிறும் களிறும்
உனை கண்டு மிளிரும்!

துளிர்க்கும் மழைத்துளி
உன் மடி தவழும்!

காற்றுக்கும் கைகள் முளைத்து
உனை தீண்ட தொடரும் ..

உன் நிகக்கண் இடுக்கினுள்
என் நித்தமும் தொலையும்..

உன் புருவ அசைவுகளில்
சிறு பூவும் பூப்பெய்தும்!

உன் சைவ கண்களில்
அசைவ பார்வை அலைமோதும்!!

உன் மெல்லிய இடை நூலகத்தில்
நான் எதுகையும் மோனையுமாய்...

சிலையழகால் சிறையாக்கினாய் !
சில நிமிடம் என்னை மரமாக்கினாய் !

உன் சிரிப்பினால் சித்தம் கலங்கும்
என் சிந்தையின் மொத்தம் மயங்கும்!

முத்து பவளம் மாணிக்கம்
இவையாவும் உன்னிடம் யாசிக்கும்!

சில நொடி தோன்றும் வானவில்லும்
உன் கண்களால் காணவே தவமிருக்கும் !!

சந்தங்கள் எல்லாம் உன்னை பாட
சண்டைகள் போடுது ஏனோ?

உன்னால்
கூண்டுக்கிளியும் குயிலாகும்
சிறு பட்டமும் வானூர்தியாகும்!!

பொம்மைகள் கொண்டு நீ விளையாடி
பொம்மலாட்டமும் ஆடுகிறாய் ...

கயிறு கட்டி நீ தூலியாடா
ராட்டினமாய் உனையே சுற்றுவேன்!

உனக்கு நான் சோறுவூட்டி
நிலாச்சோறு நான் அறிவேன்!

நீ பூக்களின் அருகினில் போனாலே
தேனீக்கள் மொய்த்திடும் தன்னாலே...

தெருவில் நீ நடந்து சென்றால்
சாலையோரப்பூக்களும் சாய்ந்து உனையே பார்க்குமே..
உன் பாதம் பட்ட இடமெல்லாம் புதுப்பூவும் பூக்குமே..

தொலைதூரத்தில் உன் முகம்
ஆகாயத்தின் ஒற்றை நிலவு !

உன் குரல் கேட்டாலே
பூனையும் வீணை வாசிக்கும்!
புலியும் புல்லாங்குழலூதும் !

இதழ் முத்த கோபம் கொள்!
மார்போடு மன்னித்தருள்!!

உன்னுடல் வியர்வை தான்
என் உயிர் செடிக்கு சொட்டு நீர் பாசனம் ..

உன் காதுக்குள் காதல் சொல்ல
காலமெல்லாம் காத்திருப்பேன்...

பெண்மை
நீயே அதற்கு
பெருமை..

"தீண்டாமை" வேண்டாமடி
உன் கைகள் தாராயோ!!!

bottom of page