top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
VANMATHI S - India
Entry No:
76
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
புரியாத அன்பில் ஓர் கடிதம்!
ஜில்லென்ற காற்றாய்
சிலிர்க்க வைக்கும் பூவே...
சிலையின் சிற்பமாய் செதுக்கிய
வடிவம் போல்!...
அமைதியின் சிற்ப்பியாய்
புன்னகைக்கும் இதழ்கள்...
எத்தனை அழகு,,,
மெய் மறந்து நிற்கும்
பொம்மை போல் நான்!...
என்னையும் மெய் சிலிர்க்க
வைத்த சிலையே...
கண்ணெதிரே நின்றும்
பேச ஓர் தயக்கம்...
இது பயமா? இல்லை பதற்றமா
என்று தெரியவில்லை!...
தூரத்தில் இருந்து பார்க்கும் போது
பேச துடிக்கும் என் இதழ்கள்...
அருகே வந்ததும்
பார்க்கவே தயங்கும் இரு விழிகள்...
மொத்ததில் மௌனமான சிரிப்பு,,, கண்ணத்தில் விழும் சின்னதான குழி,,,
குழந்தை போல் பேசும் மென்மையான குறல்,,, பாசி மணிகளாய் கோர்த்தது
போன்ற முத்து பற்க்கள்...
அய்யோ எத்தகைய அழகு,,,
வார்தைகளே இல்லை வர்ணிக்க... புரியாத அன்பில்
ஓர் கடிதம் உனக்காக!...
bottom of page