top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

VALLAL PERUMAL E. - India

Entry No: 

461

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தென்றல்விடு தூது


மல்லிகையின் மணத்தையெல்லாம் தனதாக்கி;
புல்லினது பனிநீரால் குளிர்ச்சிப்பெற்று ;
தென்றிசை மலைகாண விரைந்துச்செல்லும்,
தென்றலே செப்புகிறேன் என்மொழியை, சற்றே நில் !
அன்றொருநாள் பிரிந்துசென்றாள் என்னைவிட்டு,
இன்றுமென்றன் நெஞ்சிலுள்ளாள் வஞ்சியவள் ;
தாமரை முகத்தனையே நாடி என்மனம்,
தா மரைபோல் தாவினதே அறிவாய் நீ !
செங்கமலம் வெட்கமுற பங்கயமும் நாணமுற;
தேங்குலாவும் பூமுகத்தாள், புன்னகைத்தாள்.
தத்தையவள் பிறைநுதலை கண்டிட்டே ஓர்குவளை,
முத்தனைய விழிதிறந்து ஏமாந்ததே நிலவென்று !
இத்தகைய எழிலநங்கை கண்டிட்டால் நீயுமே,
மெத்தவே எடுத்துரைப்பாய் என்னிலையை அப்போதே ;
கொஞ்சும் கிள்ளையவள் கோளமொழி கேட்டிடவே,
பஞ்சனைய என்நெஞ்சம் படும்பாட்டை நீயறிவாய் ;
ஒண்டமிழின் தமிழ்ச்சுவையை ஒத்த அவளிடம்,
விண்டு திரும்பு விரைந்து.

bottom of page