top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
V. Saravanakumar - India
Entry No:
458
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கவிதைப் போட்டி :
தலைப்பு : அன்பு...
மனித நேயத்தின் ஊற்றெடுப்பாய்,
உயிர்கள் அனைத்திற்கும்
நாடித்துடிப்பாய்,
உள்ளங்களையெல்லாம்
உயிர்த்தெழ வைக்கும்
பேரன்பே...
அன்பின் வழியது உயிர்நிலையென்று,
உலகையே சொல்ல வைத்த
மகத்துவம் பெற்ற
தரணியின் தாரக மந்திரமே
நீதானோ?...
தெரேசா அன்னையென்றானதும்
அன்பாலே...
தாய் அரவணைத்துக் கொள்வதும்
அன்பாலேயென்று,
உலகையே கட்டி வைத்த
பூமியின் தாரகையே...
நவரத்தினமெல்லாம்
வரவேற்கிறது உன்னை,
நீயும் ஒருவகை
ரத்தினமோயென்று...
கிளிப்பிள்ளைக்
கொஞ்சிப் பேசுவதும்,
சோடிப் புறாக்கள்
இணைந்தேயிருப்பதும்
உன்னைப் பெற்ற
வரத்தாலோ ; என்னவோ...
நீயுமொரு பொக்கிசமே...
பாலைவத்தையும்
சோலைவனமாக்கி,
என்றும் பூப்பூக்க வைக்கும்
புதுவகை மலராய்
அன்பே வா!...
*************************
bottom of page