top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Thendral Ramkumar R - India

Entry No: 

456

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்:
விதையாய் வந்து விழுந்தாய்
இரு விழியால் நெஞ்சம் உழுதாய்
கிழக்கும்கூட எனக்கு இன்று
விடியும் உந்தன் பொழுதாய்
சிரித்தே கொல்லும் சிரிப்பில்
சிந்தையழிந்தே ஆனேன் பழுதாய்
இரக்கமின்றி இரவில் எந்தன்
உறக்கம் தின்று செரித்தாய்
நினைக்கும்போது கவிதை தந்து
நினைவில் ஊறி நுரைத்தாய்
கனக்கும் உள்ளக்கிடங்கின் குப்பை
களைந்தே வெள்ளையடித்தாய்
வெடிக்கும் பஞ்சின் இதமாய்
வார்த்தைப்பேசி காதல் வளர்த்தாய்
நதியில் வீழ்ந்த துளியாய் எந்தன்
உயிரில் வந்து கலந்தாய்
நரம்பிலோடும் உதிரமெங்கும்
நீயே ஓடி நிறைந்தாய்
மரணம் நேரும்பொழுதும் உன்னை
மறவேனென்று உரைத்தாய்
எனக்கு எந்தன் உயிர் நீ உன்னை
மறப்பேனென்றா நினைத்தாய்?
காதல் சொல்ல வந்தேனன்று
எதுவுமில்லை எனதாய்
சொன்னேன் அன்பே இன்றும்
உன்னால் வாழ்க்கையாச்சி முழுதாய்
எனக்காக நீ சிரித்தே உந்தன்
வலியைக்கூட பொறுத்தாய்
இருக்கும் காலம் வரைக்கும் அன்பே
நீயும் இங்கு ஒரு தாய்....

bottom of page