top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Thangavelu.T.K Kandan - India

Entry No: 

258

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


தலைப்பு : காவல் தெய்வம்.

வல்லமை தாராயோ
வாழும் மனிதருக்கே
வல்லூராய் வந்திங்கே
வாழ்வை மிரட்டுகின்ற
நுண்ணுயிர்க் கிருமிகளை
நீர்க்கச் செய்திடும்
நுண்ணறிவு நல்கியே
பல்லுயிர் காத்திடுவாய் !

நித்தம் நிகழ்கின்ற
உயிர்ச்சேதம் தடுத்திடுவாய்
மொத்த அழிவினை
மீட்க அருளிடுவாய்
காக்கும் தெய்வமே
கருணைக் கடவுளே
தாக்கும் நோயினைத்
தடுத்து நிறுத்திடுவாய்.

க.தங்கவேலு.

bottom of page