top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Tamizharasan R - India
Entry No:
507
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அரிதான அன்பும்...
அழகான புரிதலும்...
"காதலாய்"...
அடைக்காக்கும்
கோழிக்கென
ஐந்து கூடை
வாங்கி வருவாள்....
அழகான
எண்ணங்கள் என்று
அவளுக்கென
ஏற்றுக்கொண்டான்...
காகம் வந்து
கரையும் முன்னே
காலை உணவோடு
காத்திருப்பாள்...
காத்திருந்த
நொடிகளை அவனும்...
காதலோடு
புரிந்து கொண்டான்..
சிறகடித்து
உணவைத் தேடும்
சின்னஞ்சிறு
உயிர்களுக்கென
பேழை ஒன்றில்
தானியம் வைப்பாள்...
குவளை ஒன்றில்
குடிநீரும் வைப்பாள்...
அவளோட அன்பின்
வெற்றி...
அவளைப் புரிந்த
இவனின் புரிதலால்...
அன்பு....புரிதல்....காதல்....
- Tamizharasan R
bottom of page