top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Sushmitha V - India
Entry No:
360
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
முதல் சந்திப்பு...
இரவின் நிழலில்,
நிலவின் ஒளியில்.,
....ஆம்!!. கண்டதும் காதலனாக..
இல்லை இல்லை.. கவிஞனாக.!
வார்த்தைகள் திணற,
உரைத்தேன் உள்ளத்தை..,
நான் அவளின் அவன்
ஆகும் ஆசையில்..
ஏங்கினேன்,,யாருக்கு தெரியும்..
ஏக்கம் பதிலுக்காகவா
இல்லை குரலின் இனிமை
கேட்கவா என்று...
மெல்ல அசைந்தது இதழ்...
படபடப்பில் இங்கு இதயம்,??
பதிலால்..,
இங்கு உள்ளத்தின் உணர்வு
வெளிப்பட்டிருக்கக் கூடாது
என்ற மனதின் குரல்...
ஆம்.. அவள் வேறொருவனின்
அவளாக நிச்சயிக்கப்பட்டவள்..
சிறிது சோகத்தில்தான் காதல்
எனும் இக்கவிதை வரைகிறேன்
தோல்வியே ஆயினும்.,
இதுவும் காதல் தானே...♥️
bottom of page