top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

SRVP ROSICHANDRA - India

Entry No: 

272

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


#அன்பு

அசாதாரண வார்த்தையில்
ஆர்பரிக்கிறாய் ஆழ்மனதில்

ஆழி அலைகளிலே
அலைகிறது என்மனமும்
அமைதியாய்

தேளாய் கொட்டினாலும்
தேனமுது தெவிட்டினாலும்
இன்னமுது படைத்தாலும்
இன்னல் பல தந்தாலும்

துடிக்கின்ற இதயத்ததை
நிறுத்திட இயலாது

தூவானம் துவண்டாலும்
பூ மணம் மடிந்தாலும்
புன்னகைப் புதைந்தாலும்

பூத்திடுமே என் மனதில்
உன் நினைவு மத்தாப்பு

கார்மேக சிவந்தாலும்
கடுஞ்சினம் கொண்டாலும்
கல்லாய் மனம் போனாலும்
காத்திருப்பேன் சிலையாக

கரம்பிடித்த நாள் முதலாய்
வெண்மேகம் நானாக
செம்பரிதி நீயாக

பொருத்தமில்லா
இணையென்று
தூற்றுவோர் பலரிருக்க

பாவம் என்ன தெரியும்
அவர்களுக்கு
காதலின் கவிரசமும்
காட்டாறு கனியமுதும்

அட்சயபாத்திரமாய்
அன்பிருக்க
அள்ள அள்ள பெருகுமே!
கடுகளவும் சிறுகாதே!

#சரவிபி_ரோசிசந்திரா

bottom of page