top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Senthamarai Selvi G - India

Entry No: 

161

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு
———

அன்பு என்ற மூன்றெழுத்து
வாழ்வை மாற்றும தலையெழுத்து

செடியில் பூத்த பூக்கள்
மண்ணில் உதிர்ந்து போகும்
மனதில் பூத்த அன்பு
என்றும் உதிர்வதில்லை

“அன்பு”

கிடைத்தவர்க்கு பொக்கிஷம்
இழந்தவர்க்குப் புதையல்

இன்று கிடைக்கும் அன்பை பொக்கிஷமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்
இழந்தால் புதையல் கிடைக்குமோ கிடைக்காதோ
நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது
அது “அன்பு”

எவ்வளவு கிடைத்தாலும் சலிக்காதது
வெறுத்தாலும் விட்டு விலாகாதது

“அன்பு”
கோபத்திலும் குறையாதது
சாகும் வரையிலும் மறையாதது

தூய்மையான அன்பு
பனை வெல்லம் போன்றது
திகட்ட திகட்ட தின்றாலும் சுவை மாறாதது

உண்மையான அன்பு
மலைகளில் தோன்றும் அருவி போல
ஆயிரம் கசப்பான செடிகளை சுமந்து வந்தாலும்
அனைத்தும் மூலிகையே

நிலையான அன்புக்குப் பிரிவில்லை
சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் இல்லை
தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை
உண்மையான என் அன்புக்கு மரணமில்லை

bottom of page