top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sathish kumar Devaraj - India

Entry No: 

195

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பே..

உன்னை என் உடமையவளாக உணர்கின்றேன்.. காரணம் கேட்டால் பதில் இல்லை என்னிடம்...

புரிகின்றது எனக்கு
நான் நினைப்பது தவறு என்று..

ஆனால் முடியவில்லை ...

உன் விழி என்னும் தூண்டிலில் சிக்கிய புழுவாக துடிக்கிறேன்...

உன் நினைவுகள் என்னும் வலையில் சிக்கிய மீன் போல் மீள முயன்று .
அதில் ..
மாண்டு தான் போகின்றேன்...

உன்னை காணும் ஒவ்வொரு நொடியும் புயலில் சிக்கிய ஓடம் போல் செல்லும் பாதை தெரியாமல் தொலைந்து போகின்றேன்...

உன் நினைவு என்னும் நிகழ்வு தொடுக்க ஒரு நொடி போதும்..

மறக்க நினைக்கும் பொருட்டு என் ஆயுளும் போதாது கண்ணே..

என் செய்வேன் ...
நீள்கிறது என் விசும்பல்..

தெளிந்த நீரோடையாம் என் சிந்தனைகள்..

இன்று ஆழ்பெறும் உன் நினைவின் சுனையாக மாறிப்போனது ஏனோ..?

வலிக்கிறது கண்ணே...காயம் இன்றி முதல் முறையாக...

உன் முகம் பார்த்து
ஒரு நொடி போவது ஒரு யுகம் கடப்பது போல் உணர்கின்றேன்..

நெஞ்சம் முழுதும் பாரம்..வாய்விட்டு அழவும் முடியவில்லை...மனம் விட்டு சிரிக்கவும் முடியவில்லை...

என்ன இது புது வித உணர்வு...?
மரண வேதனை என்று கேட்டது உண்டு..
உணர்கின்றேன் இன்று..உந்தன் வழியில்...

எளிமையாக சொல்லிவிட்டாய் ...
முடியாது என்று...அனுதினமும் ததும்புகின்றேன் வெற்று பானையில் நிரம்பிய கானல்நீராய்...

காட்சி பொருள் ஆனதோ என் மனசாட்சி...
என் மூளை சொல்வதை கேளாது விம்மி துடிக்கின்றது...

என்னை நீ புறம் தள்ளும் ஒவ்வொரு கணமும் ..ஏனோ நெருப்பில் விழுந்த விட்டில் பூசியாய் பரிதவிகின்றேன்...

ஏன் இந்த விசும்பல் ...
ஏன் இந்த புலம்பல்...

புரியவில்லை..
மனம் சமாதானம் ஆக மாறுகிறது...
என்னையும் இயல்பாக இருக்க விடாமல்..
தானும் இயல்பாக இல்லாமல் பரிதவிகின்றது....

மீண்டு விடுவேன்...
வெகு சீக்கிரம்...
நம்பிக்கை என்னும் துடுப்பை கொண்டு..

உணர்வாய் நீ ஒருபொழுது்...

ஆனால் அந்த தருணம் எனதாக இருக்கும்...

நிச்சயம் கண்ணே...

அந்த தருணம் எனதாக இருக்கும்...

விருதை
கவிபாரதி. சதிஷ்

bottom of page