top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
SANDHYA MURALIDHARAN - India
Entry No:
439
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதலும் பருவ காலங்களும்
பேருந்தை எதிர்நோக்கும் பெண் நீ
யாரும் அறியாமல் என்னை
எட்டி நோக்கி போனதும்
இனம் புரியா வெப்பம் தோன்றுதடி
அதுவே என் இளவேனிற் காலம்!
காதலைக்கூற ஒத்திகை பல பார்த்து,
உன்னிடம் நெருங்கயில்
உடலெல்லாம் வியர்த்து,
வீரம் இழந்து
சட்டையெல்லாம் ஈரமானதே!
அதுதானோ நான் கண்ட
கோடைக் காலம்!
தனிமை எனும் கொடுமையால்
வாடி உதிர்ந்த
புன்னகையெல்லாம்
காதலை ஏற்று நீ சிந்தும் நாணத்தால்
என் முகமெங்கும் பூத்துக் குலுங்கிடுதே...
அது எனக்கானது வசந்த காலம்!
தடைகள் பல கடந்து
உண்மைக் காதலின்
விடைகள் நாம் புரிந்து
மனதால் வாழ்ந்த வாழ்வதனை
மணம் செய்து வாழத் தொடங்கும்போது
மனம் குளிர்ந்திடுதே,
அதுவே எனக்கு குளிர் காலம் !
இனி நமக்கு என்றுமே இன்ப காலம்
சந்தியா முரளிதரன்
கோவை
தமிழ்நாடு இந்தியா
bottom of page