REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Rahul Varma - India
Entry No:
291
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பே!
உன் கண்களினால் என்னை
கவர்ந்து இழுத்து
கண் இமைகளினால் காவியம் பேசு!
உன் நெற்றிப் பொட்டை
என் நெற்றிக்கு இடம்மாற்று!
உன் கண்ணீர் துளிகள் கொண்டு
என்னைப் பொசுக்கி விடு!
உன் சிரிப்பினால் என்
சிந்தனையை மாற்றி விடு!
உன் உதடுகள் கொண்டு
என் உதட்டிற்கு அழுத்தம் கொடு!
உன் உயிர் மூச்சினை
என் உயிரோடு பங்கிட்டு கொள்!
உன் கைகள் என் கைகள் பிடித்து
உரசிக் கொண்டே நடக்கட்டும்
பாதையைத் தேடி!
என்னை கட்டி அணைத்து
உன் கவலைகளைக் கழட்டிக் கொள்!
உன் இடையில் இருக்கும்
தண்ணீர் குடத்தின் துளிகள்
முத்து முத்தாய் கீழே விழந்து
உன் முந்தானையை நனைக்கட்டும்
உன் கெண்டைக் கால்களும் இசை அமைக்கட்டும்
உன் கொலுசினைக் கொண்டு
இப்படியே,
உன்னை எனக்குள்ளும்
என்னை உனக்குள்ளும்
இடம்பெயர் செய்து விடு!
உன் அளப்பரிய அன்பை எல்லாம்
என் மீது பொழிந்து விடு!
அப்போது,
உன் கால் விரல்களில் இருக்கும் மெட்டிகள் சொல்லட்டும் - உன்
கணவனுக்கு உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தான் போதாதென்று...
______________________________________
விசுவை.இரா.இராகுல்வர்மா சேதுபதி,