INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Ragasudha R - India
Entry No:
107
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கண்ணம்மா...
வெந்தனல் மீதினில் விழுந்திட்ட 'பூ'வென
வேதனை கொள்ளுதடி
கண்ணம்மா..
மனம் வேதனை கொள்ளுதடி,
என் வேதனை மாற - உன்
வாய்மொழி வார்த்தையாய்
ஒர் சொல்லும் போதுமடி
கண்ணம்மா..
என் வேதனை மாறுமடி..!
ஆதவன் அணலிலே வதைபடும் புழுவென
அல்லலில் துடிக்குதடி
கண்ணம்மா..
மனம் அல்லலில் துடிக்குதடி,
என் அல்லலும் தீர்ந்திட
அன்னமுன் மடியினில்
அரைநொடி போதுமடி
கண்ணம்மா..
என் அல்லலும் தீருமடி..!
காட்டாற்று வெள்ளத்தில் உடைபடும் அணையென
கதறி உடைந்தழுவுதடி
கண்ணம்மா..
மனம் கதறி உடைந்தழுவுதடி,
என் அழும் மனம் ஆறிட
அல்லியே உன்விழி
பார்வையே போதுமடி
கண்ணம்மா..
மன ஆறுதல் சேருமடி..!
சீற்றத்தின் இடையிலே சிக்குண்ட படகென
இன்னலில் தவிக்குதடி
கண்ணம்மா..
மனம் இன்னலில் தவிக்குதடி,
இன்னலும் ஓடிட
தங்கம் என் அருகில் நீ
இருந்தாலே போதுமடி
கண்ணம்மா..
எந்த இன்னலும் அனுகாதடி..!