REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
R.Thenmozhi Ramiah - India
Entry No:
495
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
என் கனவுக் காதலன்....
யாரும் நுழைய முடியாத
என் கனவுக் கோட்டைக்குள் கள்ளச் சாவி ஏதுமின்றி,
தனி ஒருவனாய் நுழைந்தவனே!!!
என் கோட்டைக் காவலர்களின்
கண்களில் மறைந்து,
என் கண்களில்
மாட்டிக்கொண்ட காரணம் ஏனோ?
யார் நீ??
போர் வீரனா? இல்லை
கொள்ளைக்காரனா?
நிராயுத பாணியாக
என் கனவுக்குள் நுழைந்த நீ உன் வேல் விழிகளால்
என்னைத் தாக்கியது ஏனோ?
அத்துமீறி, என் கனவுக்
கோட்டைக்குள் நுழைந்தவன்
" நீ "...
ஆனால்,
எந்த காரணமும் இன்றி
என்னைக் கைது செய்து விட்டாயே,
"உன் கண்களால்"!!!
என் சாம்ராஜ்ஜியத்தின்
" இளவரசியான" நான், இப்பொழுது
கைதியாக உன் மனச்சிறையில்.....
யார் நீ?
என் கனவு கோட்டையின் காவலனா?
இல்லை
என் இதயக் கோட்டையின் காதலனா??
முரசுகள் அறிவிப்பு இன்றி,
வாட்கள் மோதும்
சத்தம் இன்றி,
இரத்தக் காயங்கள்
ஏதுமின்றி,
போர் செய்து,
என்னைக் கைது செய்தவனே!!!
நீ வென்று விட்டாய்......
நீ வென்றது,
யாரும் நுழைய முடியாத
என் கனவுக் கோட்டையை
மட்டுமல்ல....
என் இதயக் கோட்டையையும் தான்.....
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இரா.தேன்மொழி.
காரைக்குடி.