REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Poornima Shankar - India
Entry No:
464
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காற்று வந்து மோத மோத
மேனி கிழிக்கும் வாழை போல - உன்
நினைவு என்னை தாக்க தாக்க
கவியும் சுரக்குது ஊற்ற போல
பஞ்ச பிச்சு போட்டது போல்
நெஞ்சுக்குள்ள உந்தன் பிம்பம்
மஞ்சள் தேய்ச்சு குளிச்சாலும்
மறையவில்ல சிவந்த நாணம்
ஒத்தையடி பாதையில
காதல் சுமந்து நானும் போக
எதிர்த்தாபுல நீயும் வந்த என்னை போல மன்னவனே
ஆண்டு பல கடந்தாலும்
ஆளும் காதல் குறையவில்ல
மாண்டு போகும் வேளைவர
மனசுக்குள்ள காதல் வாழும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நீங்காம இசை பாட
பித்தம் தலைக்கு ஏறியதோ
பிதற்றுகிறேன் நானிங்கு
பாத்து பல நாளாச்சு
பாவி மனம் பாழாச்சு
நேத்து போல இருக்குதய்யா
நெடு நாளும் ஓடிப்போச்சு
கண்ணுக்குள்ள கூடுகட்டி
கனவில் எட்டி பாக்குறியே
பெண்மனச புரிஞ்சுக்காம
பொருள தேடி ஓடிறியே
எத்தனை நாள் இந்த கூத்து
எனக்கு நீயும் சொல்லு மச்சான்
நத்தை போல ஓடிடுது
நகராத நேர மச்சான்
தேன போல வார்த்தையில
தேகம் குளிர வைக்கிறியே
மான போல தாவும் மனச
மயக்கி நீயும் சாய்கிறியே
உன் முத்துப்பல்லு கூசுதய்யா
முந்தி நானும் வந்திடுறேன்
சத்தும் சொத்தும் நீதானே
என் தங்க ஆசை மச்சானே
உன் வரவ பார்த்திருக்கேன்
ஓடி வாயே என் அழகு மச்சா
கரம் புடிச்சு கதை பேசனும்
காலமெல்லாம் உன்கூடவே
- பூர்ணிமா சங்கர்
கோயமுத்தூர்