top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Pavithra Ramesh Kumar - India
Entry No:
124
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கண் மூடி சுவாசிக்கும் போது
சூடாய் ஒரு மூச்சுக் காற்று
காதோரம்...
கனவின் சாலையில்
கை கோர்த்து நடமாடும் நெஞ்சம்...
கண்கள் மட்டும்
பேசிக் கொள்ள
சுற்றி எங்கும்
மௌனத்தின் சப்தம்...
உன் இதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு புன்னகைக்கும்
தடம் புரளும் இதயம்...
உன் வாசம் உணரும் நொடியில்
தடுமாறி போகிறது சித்தம்...
நேசத்தை நெஞ்சளவு நிரப்பி
மூச்சுவிடத் தவிக்கிறேன்
என்னவனே...
உன் மார்பில் சாய்ந்து
உயிர் விடும் நாளை
வரம் என நினைக்கிறேன்....!
- Goddess of words 😉
bottom of page