top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Pandikumar P - India

Entry No: 

332

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அந்தி சாயும் வேளையில்...
கார் முகில் பின்னே...
வெட்கப்படும் முழுமதியே...!மறைந்திருந்து பார்க்கும் மாயை ஏனோ....?
விழியில் தடம்புரண்டு...
மனதில் தள்ளாடி எழுந்து...
எதிரே காட்சி தரும்...
சிறகில்லா தேவதையே...!புன்னகையில் மொழிகள் பேசி..
இமையில் சைகை காட்டி...
கடந்துசெல்லும் கவிதையே..!
இந்தக் கவிதைக்கும் கவி வடித்தேன்..
எழுத்துக்கள் பிறவி எடுத்தன..
வார்த்தைகள் வாசம் செய்தன..
மொழியோ பொறாமை கொண்டன...!
நித்தம் நின்பாதம் தடம் அறிய...
என் விழிகள் துயில் மறந்து...
இரண்டாம் உலகில் ஊசலாடுகிறது...!
எனக்கானவள் நீ இல்லை என்றாலும்...
என்றும் நீ என்னவள்...!
இது...
காதல் இல்லை...!
காமம் இல்லை....!
உறவுக்கு பெயரும் இல்லை ...!
அன்பே.....!!
இன்றும் நீ....
கம்பன் காவியம்...!
பிரம்மன் ஓவியம்...!
ஓவியமே.........!

bottom of page