top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Nishanth vigneswar R - India

Entry No: 

148

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதலென்பது இருதயம்
வருடும் அன்பின் அரவணைப்பா...?
போர் தொடுத்து கீறும்
யுத்த ஆயுதமா ...?

வருடல் இன்பத்தில்
இரு உயிரும் சேர்ந்திடுமா ...?
போரின் முடிவில்
ஓர் உயிர் மாய்ந்திடுமா...?

இளமைப் பருவத்தில்
காதல் ஒரு பலப்பரீட்சை
இதில் இன்னலும் இன்பமும் இருளும் ஒளியும் வாழ்வும் வீழ்வதும்
வேடிக்கை கொண்ட யாக்கை ...

பற்றுகளின் பயணத்தில்
பாதத் தடுமாற்றம் இருப்பினும் பாதையின்
முடிவில் அன்பும் சுக - வலி
கொண்டது ...

காதலும் காமமும்
இரு வேட வேட்கையுடையது ,
இவை இரண்டிலும் முத்துக்குளித்தால் பிறவி
பயனின் மோட்ச முடிவது ...

தீரும் ஊடல்
தீரா கூடல் நான்கு
விழிகள் மயக்கத்தில்
பாழ் மனங்களும் போதைகளின் சாயல் ...

உன்னத உறவும்
என்னுயிரும் அவளென்பேன்...
உயிரோட்ட உதிரமும்
அவளுக்கு நான் என்பாள்...

ஆண்மகன் - நானோ ...!
பிணியொன்று என்னுடலில் கண்டேன் ...

நோயாளியாக என்னை
அவள் கண்டுவிடக் கூடாதென்று மொழியிருந்தும் மௌனம்
கொண்டேன்...

எனக்கென்று உயிரையும்
அவள் அளிப்பாள் - அதை
வேண்டாமென்று என்னுயிரை மாய்த்துக் கொண்டேன்...

அன்பின் வருடல் இன்பத்தில் இரு உயிர் சேர்ந்தது...
பிணிப்போரின் முடிவில்
ஓர் உயிரும் மாய்ந்தது ...

Nishanth vigneswar R ✍

bottom of page