top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Muthumalai C - India

Entry No: 

432

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


அன்பு


நீர்வரையவாம் நீர் மலர்

நீரின் தன்மையே
நீர்மலர் தோற்றமே
நீளும் நற்கொடை
நல்லவர் சீர்மையாம்

பாரில் நற்பொருள்
இன்றியே துன்புற
பார்த்தும் தானமே
செய்திடார் தீயவர்

வேரின் தன்மையைக்
காட்டிடும் நல்மரம்
வேதம் போன்றவர்
நற்குண ஈகையர்

நீரில் ஆமையை
நனைய நீக்கலோ
நீளும் வஞ்சகர்
செய்கையை ஒக்குமே

முனைவர் சி முத்துமாலை
சென்னை

bottom of page