top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Mariyanayaki I - India
Entry No:
353
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
எங்க போன அம்மா...
பாலூட்டி வளர்த்த உன் பிள்ளை
பாசம் தேடி அலையுதே
எங்கம்மா போன
தனித்து இருக்க சொல்லி
என்னை தனியாய் விட்டுட்டு
நீ எங்கம்மா போன
முழுமுடக்கம் முடிஞ்சும்
உன்ன அலையே காணோம்
எங்கம்மா போன
ஈரேழு நாட்கள் தனித்திருந்த முழுதும்
உன் நினைப்பு மட்டுந்தாம, எனக்கு
எங்கம்மா போன
உன் வாசம் இந்த வீடு முழுக்க இருக்கே
உன் அன்பு சிரிப்ப மட்டும் காணோமே
கண்ணீர் குளம் போல தேங்குதுமா
மனசோ விம்மி அழ போகுது
எங்கம்மா போன
எனக்காக காசு சேர்க்க போயிட்டியா
என் கனவை துரத்த
உன் உறக்கம் தொலைத்து போனியா
எங்கம்மா போன
வைரஸ் ராணிய எதிர்க்க போனியா
உன் துப்புரவு பணியிலே மூழ்கிட்டியா
என்னை காத்து
உன்ன காக்க மறந்திடியா
எங்கம்மா போன
சொர்க்கம் தேடி போயிட்டியா
உன் சொந்தம் என்னை
தவிக்க விட்டுட்டு போயிட்டியா
எங்கம்மா போன...
_ மரியநாயகி
bottom of page