top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Manoj Thirumalai - India

Entry No: 

401

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு
ஏக்கங்கள் மறந்து துக்கங்கள்
துறந்து உலகையே ரசிக்க செய்வது உன் அன்பு..
உன் அன்பின் ஆழத்திற்கு
ஆழிக்கடலே சிறு குளம்தான்..
சேர்த்து வைத்த அத்துணை ஆசைகளையும் அடகு வைக்கிறேன்,,
உன் அன்பின் பாதத்தில்..
மூன்றெழுத்து மந்திரத்தால்
என் மூச்சுக் காற்றில் சுவாசம் செய்கிறாய்..
இனி கொடுக்க எதுவும் இல்லை
நானே நீதான்
நீயே நான்தான்..
நம்மை கட்டிப்போட்டது எதுவோ அதுவே நீயும் நானும்
அதிலே நீயும் நானும்
அதற்காகவே நீயும் நானும்...

bottom of page