top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
lokesh Manibalan - India
Entry No:
121
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல் மலர்...
இன்றும் அந்த மரத்தடிக்குச் சென்றேன்
என்னையே சுற்றி வந்தது
ஒரு பெயர் தெரியாத பட்டாம்பூச்சி
நான் கையில் வைத்திருக்கும்
மலரில் தேனுரிஞ்ச
வந்திருக்கும் போலும்.
அவள் வருவதாகத் தோன்றவில்லை
இந்த மலரை வீணாக்கவும்
எனக்கு மனமில்லை.
அருகிலிருந்ததோ ஒரு குருட்டுக் கிழவி
அந்த கிழவியிடமே
மலரை கொடுத்தேன்
அவள் விழிமலர்களில் இருந்து
இதயநீர் வடிந்தது!
-லோகேஷ் மணிபாலன்
bottom of page