top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Lokesh M - India
Entry No:
120
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
இறந்துபோய் மீண்டும் பிறந்தேன்...
பூங்காவின் வலது புறம்
அமைந்திருக்கும் கல்இருக்கையில் அமர்ந்திருந்தது ஒற்றைச் சருகு
அதனருகில் நான் அமர்ந்திருந்தேன்
எனதருகில் ஒரு மரம் நின்றிருந்தது.
நாங்கள் மூவரும்
மழைக்காகக் காத்திருந்தோம்...
அடர்த்தியான கருமேகங்களுக்கு இடையில்
மின்னலொன்று எட்டிப் பார்த்தது!
ஆகாயத்திலிருந்து விழுந்த
முதல் தூறல் அது!
எனதருகில் இருந்த மரத்தின்
ஒர் இலையில் பட்டு
என் முகத்தில் தெரித்தது!
காத்திருந்த சருகு பறந்து போனது
காத்திருந்த மரம் நனைந்து போனது
காத்திருந்த என் மனம் காணாமல் போனது!
என் மீது மரம் தூறிய அந்த
ஆகாயத்தின் முதல் தூறலில்
இறந்துபோய் மீண்டும் பிறந்தேன்!
-ம.லோகேஷ்
bottom of page