top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

LILLY MATHI - India

Entry No: 

228

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல் கண்ணீர்

அருவியில் நீர் வற்றினாலும் என் கண்களில் நீர் வற்றுவதில்லை
கடலில் அலை குறைந்தாலும் என் மனதில் வலி குறையவில்லை
வானத்தில் இடி அணைந்தாலும் என் உள்ளத்தில் நெருப்பு அணியவில்லை
இத்தனை நாட்கள் எங்கு ஒளிந்து இருந்தாய்
அவன் நினைவுகள் சுட்டதும் என் விழி கதவுகளை
திறந்து வந்துவிட்டாயா புத்தகத்தின் பக்கங்கள் போல உன் நினைவுகள் பல
உன் ஞாபகங்கள்
அதில் உள்ள எழுத்துக்கள்
என் நிழலாக வந்தாலும் என்னை சேர முடியாது
ஏன் தெரியுமா?
உன் பாதை இருள் நிறைந்தது
நீயே அதில்
வெளிச்சம் தேடி அலைகிறாய் என் பாதையோ
ஒளி நிறைந்தது
அதில் உன் நிழல் இருள்
எனக்கு தேவையில்லை
உன் இதயம் கண்ணீர் வடித்தாலும்
அது வீண் தான்
உன்னுடைய பார்வையில் ஆயிரம் மன்னிப்பு இருக்கலாம் ஆனால் என் பார்வையில் என்றுமே மறதி இருக்காது
என் பாதை விண்ணை நோக்கி என்னை பின்தொடர நினைத்தால் உன்னை வைத்துக்கொள் தேக்கி
உன் அன்னை தருவாள் என் அன்பின் பாக்கி

காதல் வணக்கம்.

bottom of page