INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Lenin K - India
Entry No:
499
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கவிதையின் காதலன்
உன் நெற்றியில் முத்தமிட்டேனடி.!
என் காதல் உணர்ந்தாயோ.?
உனக்கு நான் தான் என புரிந்தாயோ.?
கண்களால் என்னை கட்டி இழுத்தாயடி.!
வசியம் ஏதும் வைத்தாயோ.?
வலை ஏதும் விரித்தாயோ.?
சிவந்த இதழை சுழித்தாயடி.!
சுழல் ஏதும் உண்டோ.?
சுற்றி வளைக்க திட்டம் ஏதும் உண்டோ.?
கழுத்தில் மச்சம் கண்டேனடி.!
அதில் நான் முத்தம் பதிக்க தானோ.?
இல்லை வேறு காரணம் உண்டோ.?
இன்னும் அழகை உன்னில் கண்டேனடி.!
அதை வரையத்தான் உன்மார்பும் உண்டோ.?
இல்லை அதை ரசிக்க மட்டும் தானோ.?
இல்லாத இடையை கண்டேனடி.!
அதை காண என் கண்கள் போதாதோ.?
இல்லை அதில் வியக்க நேரம் .?
கானாதோ
உன் பாதம் அது சின்னதடி.!
ஒரு நாள் பாதத்தில் வாழ்ந்ததை மறவேனோ.?
உன் பாதத்தில் நான் வாழ காலம் வராதோ.?
"...ஏங்குகிறேனடி எப்போது நான் - நீ நாமாவோம் என்று..."
அதிக அளவில் காதல்…
கண்களை மறைக்கும் காதல்…
விட்டு விலக முடியாத காதல்…
உன் மீது கொண்ட காதல்.!
கண் இமைக்கும் நேரத்தில்
உன் மீது காதல் கொண்ட நான்.!
பல காதல்களை கற்பனைகளில் கண்டேன் !
சில காதல்களை புத்தகங்களில் புரிந்தேன் !
சில காதலை திரையிலும்
பார்த்தேன் !
இன்னும் அசல் காதலை என் நண்பனிடம் உணர்ந்தேன் !
"அதனினும் மேலான பொக்கிஷ காதலை உன்னிடம் கண்டேனடி"
சிறகொடிந்த இந்த பறவைக்கு
அந்த காதலை இறக்கையாய் தந்தாயே…
அது நான் உயரத்தில் பறப்பதற்கு அல்ல வானத்தை தொடுவதற்கு…
வானத்தை கிழித்தாலும் காதலை மறவேனடி
"என்னவளே..!"
-லெனின்.கி