top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Kathirvel Murugesan - India

Entry No: 

184

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

என்னவளும் நானும்

விண்ணுலகில் இருக்கும் என் வெண்ணிலாவே, நீ நான் வாழும் மண்ணுலகம் அடைவது எப்போது....

வெண்ணிலாவே, உன்னோடு கனவுகளிளே கதைத்து கொண்டு இருக்கும் நான், கருமை அணிந்த கண்களை பார்த்து கதைப்பது எப்போது....

காலங்களும் ஓடிக்கொண்டே இருக்கிறது எத்தனை காலம் தான் வரிகளிளே உன்னை வர்ணிப்பது, என்னை ஈர்க்கும் உன் கண்ணை பார்த்து வர்ணிப்பது எப்போது....

வெள்ளி நிலாவே உன் கை பிடிக்க மட்டும் ஆசையில்லை, உன்னோடு இணைந்து நம் லட்சியங்களை நிஜமாக்கவும் ஆசை, காத்துக்கொண்டு இருக்கிறேன் நீ எப்போது வருவாய் என்று....

என்னவளின் அழகைப் பார்க்கையில் வெண்ணிலவுக்கும் வெக்கமும் ஏக்கமும் வரும் மண்ணுலகில் நான் பிறக்கவில்லையே என்று....

மன்னவளே, உன்னை காணும் ஒவ்வொரு நாளும் புதுமையாக ரசித்தேன், ஏன் என்றால் புன்னகை பூத்த பூ முகம் ஒருநாள், வானுலக தேவர்களும் தேடும் தேவதை போல் ஒருநாள்....

என்றும் உன் உண்மையுள்ள மன்னவன் நான்....❤️

- கதிர்வேல்❤️

bottom of page