top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
KARTHIKA DEVI G KANNAN - India
Entry No:
314
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காத்திருப்பே காதலாய்:
காலம் கடந்தேதான் போகிறது....
இமைக்கும் நொடிகள் கூட இரக்கமற்றதாய்
மாறுகிறது...
விநாடிகள் கூட விரக்தியாய் கழிகிறது...
பதித்து சென்ற தடங்கள் மட்டுமே பாதுகாப்பாய் பத்திரப்படுத்துகிறது உன் நினைவுகளை...
காலம் தாழ்த்தாதே
கடந்து வா....
நினைவுகளில் தத்தளித்தே காலம் கழிகிறது...
எண்ணங்களில் நீ நிலைத்திருக்க
நிழலும் பொறுமை இழந்தது...
வண்ணங்கள் யாவும் கருமையாய்...
காத்திருந்த பொழுதுகள்
கலையிழந்தது...
உன் உறவை எண்ணி விழித்திருக்க..
வருவாய் என உன் வரவை எதிர்ப்பார்த்து..
கரை சேர உன் கரம் பற்றிட வேண்டும்..
பிரிதலின் கொடுமை காதலின் சாபமே...
விமோச்சனம் பெற உன் நிழல் கூட போதுமே..
கடந்து வா..
காதலின் சுவையை ஆயுள் வரை அறியலாம்..
bottom of page