top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Kannan Krishnamoorthy - India
Entry No:
364
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பெனும்
ஜீவநதி வற்றிப்போனால்
சுற்றும் பூமியது
நின்று போகும்.
அச்சரேகை
தீர்கரேகை விட
ஆழமானது
அன்பின்ரேகை
அன்பின் கடைசி
சொட்டு தீரும் முன்
வளிமண்டல காற்றெல்லாம்
வற்றிப்போகும்
மானுடம் மரித்துப்
போகும்
புல்பூண்டுகளில்லா
பாலைவனம்
என்றாகும்
இவ்உலகம்
அன்பேனும்
ஒற்றை செல்லே
இவ்உலகின்
உயிர்நாடி
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்வோம்
இந்த பூமியின்
ஆயுள்ரேகைகையை
வரைந்துவைப்போம்
மிகநீளமாய்
நம் சந்ததிகளுக்காய்.........
By
Kannan krishnamoorthy
bottom of page