top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Gayathri Nagarajan - India
Entry No:
152
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
"நண்பன்"
அன்னையின் உருவாய்
பாசத்தை போதித்தாய்!
ஆசானின் வழியில்
என்னை கண்டித்தாய்!
இல்லை என்று
ஒருநாளும் சொன்னதில்லை
ஈகை பண்பை
உன்னிடம் கண்டேன்
உனக்கென்று எந்த
சொத்தும் இல்லை
ஊராரிடம் நண்பர்களே
சொத்தென்று கூறினாய்!
எல்லாப் புகழும்
இறைவனுக்கே என்பாய்!
ஏணி வைத்தாலும்
எட்டாது உனைசேர!
ஐயமோடு வரும்
எனக்கு வழிகாட்டுவாய்!
ஒருபோதும் உன்னை
விட்டுத் தரமாட்டேன்
ஓடிவந்து உன்முகம்
காண தவிக்கின்றேன்
ஔடதமாவாய் நீ
என் மனதிற்கு!
அஃதே நீ
என்ஆருயிர் நண்பன்!!!
bottom of page