top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ganesan Mani - India

Entry No: 

269

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

மழை வரும் போதெல்லாம்
மறக்காமல் அம்மா குடை தருவாள்.
அருவருப்புச் சிலந்தி அப்பாவை எங்கும்
வீட்டைவிட்டு நகர விடாது.

எனக்கும் பிடிப்பதில்லை மழையை.
அஃதொரு ஓயாத ஒப்பாரி!

பிசுபிசுக்கும்
நசநசக்கும்
நச்சரிக்கும் மனைவியைப் போல்.
அடம்பிடிக்கும் அடங்காப் பிள்ளையைப் போல்.

ஒழுங்காக செய்யவிடாது
எந்த வேலையையும்.

சீச்சீ மழையே ஓடிப்போ!

காளான் குடையுடன்
மரங்களை மட்டும் நேசித்துக் கொண்டிருந்த...
என்னிடம் அவள் சொன்னாள்
'புரிந்து கொள் முதலில் மழைதான் மரமென்று!'
'தெரியாது என்பதில்லை ஆனாலும்....
சரி
பிடிக்குமா மழையை உனக்கு?'
என்றதற்கு
உடல் சிலிர்த்துக் கொண்டு
உயிரென்றாள் அவள்!

மழையோ
அதன் பிறகில்லை!

எனக்குள் மூண்ட மேகநதி
ஒருநாள் தாரை தப்பட்டையுடன் தரையிறங்க...
பாவம் மை அப்பிய குடைகள்.

bottom of page