INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Dinesh.V Dinesh.V - India
Entry No:
183
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
வார்த்தைகள் குரல் நாணின் மூலம் உருவாக்கப்பட்டவை...
ஒவ்வொரு மொழியிலும் காதல் என்பது இதய ஓசையிலிருந்து தோன்றி இருக்கும்...
அதனால் என்னவோ காதல் செவி வழி நுழைந்தாலும்
ஒருவித மயக்கம் தோன்றும்...
மனிதப்புழு தனிமை என்னும் கூட்டில் அகப்பட்டு...
காதலால் விடுவிக்கப்பட்டு...
வண்ணத்துப்பூச்சியாய் மறுபிறவி எடுக்கும்...
ஒரு முறை அல்ல இரு முறை அல்ல...
ஒவ்வொரு நொடியும் காதல் இயங்குது பூமி...
வண்டுக்கு பூக்கள் மீது காதல்...
இரவுக்கு சந்திரன் மீது காதல்...
பகலுக்கு கதிரவன் மீது காதல்...
மழைக்கு மண்ணின் மீது காதல்...
சிப்பிக்கு முத்தின் மீது காதல்...
முட்களுக்கு ரோஜா மீது காதல்...
பேனாவிற்கும் மை மீது காதல்... இதழுக்கு முத்தத்தின் மீது காதல்...
அனைத்தும் காதல் கொள்ள நானும் காதல் கொண்டேன் என் ஜீவனே உன் மீது...
காதல் இரு உயிர்களின் உணர்ச்சிகளின் பாலம்...