top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Charmathi Christiyana A - India
Entry No:
80
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
உலகப் படைப்புகள் அநேகம் இருந்தும்,
பிரம்மன் கூட பூரிக்க வைத்தது,
உன் அழகு தானடி.
உன் கூந்தலின் அழகை கண்டு,
சல சல என ஓடிக்கொண்டிருந்த நதி கூட,
கண்ட மாத்திரத்தில் வரிசையில் நின்றது,
உன்னை தொட்டுச்செல்ல...
அழகிற்கு அழகு சேர்க்கும்
உன் நெற்றிப்பொட்டு,
உன்னிடம் சேர்ந்த பின் துடி துடிக்கின்றன,
உன் இரு விழிகளின் இடையே, அமர்ந்த சந்தோஷத்தில்...
குயில்கள் ஓசையிட,
அதற்கு எதிர் பாட்டு நீ பாட,
உன் குரலின் இனிமையில்
உன்முன் தோற்று,
விவரிக்க வார்த்தை இல்லாமல் நின்றதாம்...
உன் அழகாலும், இனிமையாலும்,
அநேகர் உன்னிடம் தோற்ற பின்னும்,
உன் எளிமையை கண்டு
மீண்டும் பூரிப்பில் மூழ்கினார்,
இறைவனையே ஆச்சரியத்தில் மிதக்க வைத்தவள்,
நீயாவாய்...
bottom of page