INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Bakiaraj S - India
Entry No:
264
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
********
காதலென்றால் வெறும்
மெய்யீர்ப்பு தானென்று
நினைத்திருந்தேன்
பெண்ணே உன்னைக் காண்பதற்கு முன்பு...
முதன் முதலில்
பாலொளி வீசும்
பாவையுன் முகத்தைப் பார்த்தபோதுதான்
உள்ளத்தின் ஈர்ப்பே
உண்மையான காதலென்று
என்னிதயம் அறிந்தது...
எனக்குள்ளும் பூத்தது...
பார்த்ததும்
பிடித்துப்போன உன்னைப்
பறிகொடுக்க மனமில்லையடி...
உள்ளத்தில்
கலந்த உன்னை
உதறித்தள்ள மனமில்லையடி...
அதனால் தான்
அப்படியே படம்பிடித்து
மாட்டி வைத்தேன்
உன் உயிரோவியத்தை
என் இருதயத்திற்குள்...
உன் முகமும்
என் முகமும்
தரிசிக்கின்ற
ஒரு சில நொடிகள் கூட
ஓராயிரம் கவிதைகளைக்
கற்றுக் கொடுக்குதடி...
பிரம்மன் படைத்த
அதிசய காவியமே...
ரவிவர்மன் தீட்டிய
அழகிய ஓவியமே...
கரம் கோர்க்க வருவாயே...
காத்திருக்கிறேன் பெண்மானே...