top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Arun Jeevanantham - India

Entry No: 

162

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

விழித்த விழிகளால்
விரைந்து உனைத்தேட
வலிகள் வழிகளால்
விழிதோறும் பரவ

நீயோ இங்கில்லை
நினைவிலும் பங்கில்லை 
சித்திரையில் சென்றவளே
நித்திரையை வென்று விட்டாய்

காலை உணவும் கழுத்தில் நின்று
வயிற்றில் விழ மறுக்குதடி
மெச்சி புகழ்ந்த நாவும் கூட 
எச்சிலூற மறக்குதடி

நட்டு வச்ச செடி கூட
மொட்டு வைக்க முறைக்குதடி
பொட்டு வச்ச நெத்தி கூட
முட்டுக்கட்டா நிற்குதடி

கொலுசு சத்தம் கேட்கையிலே
உசுரு சுத்தமானதடி
கனவு மட்டும் காண்கையிலே
மனசு பித்தமானதடி

எட்டு மடிப்பு சேலையில
விட்டு நீயும் போகையில
சிட்டு மனம் நோகையில
தொட்டு பார்க்க நீயுமில்ல

உயிரு மட்டும் உள்ளிருக்கு
மூச்சு முட்டும் உணர்விருக்கு
நேசம் காட்டும் உனைக்காண
நித்தம் காத்து நொந்தேனடி

bottom of page